/* */

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மாற்றுத்திறனாளி பெண் தர்ணா

இலவச பசுமை வீடு வழங்க, தம்மை அலைக்கழிக்க வைப்பதாகக்கூறி, கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே, கண்ணீருடன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மாற்றுத்திறனாளி பெண் தர்ணா
X

தர்ணாவில் ஈடுபட்ட தேன்மொழியுடன் பேச்சு நடத்திய சமாதானம் செய்த போலீசார். 

வறுமையில் வாழும் வீடற்ற மக்களுக்கு சூரிய மின்சக்தியுடன் கூடிய விளக்குகள் அமைத்து, முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த டெய்லரிங் ஆசிரியராக உள்ள தேன்மொழி என்ற மாற்று திறனாளிப் பெண், பசுமை வீட்டிற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து 5முறை மனுவும் அளித்துள்ளார். ப‌சுமை வீட்டை வ‌ழ‌ங்குவ‌தாக‌ உறுதியளித்து பல முறை திருப்பி அனுப்பிவிடுவதாகவும், இதுவரை தனக்கு இலவச பசுமை வீடு கிடைக்கப்படவில்லை எனவும், தன்னை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலர், தேன்மொழியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடு பெற்று தருவதாக உறுதியளித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். இதனால், அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

Updated On: 18 April 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!