/* */

கோவையில் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவையில், லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கோவையில் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

ஐந்து முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில்  லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், சுங்கக் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், வாகன புதுப்பித்தல் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், வாகன காப்பீடு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 15 லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்புகளைச் சார்ந்த 100 க்கும் மேற்ப்ப‌ட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பல்வேறு வித கட்டணம் உயர்வால் லாரி உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், எனவே அவற்றை ரத்து செய்து, லாரி தொழிலை நம்பியுள்ள அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On: 18 April 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  5. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  6. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  7. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  9. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  10. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்