/* */

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் காவல்துறை கொடி அணிவகுப்பு

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் காவல்துறை கொடி அணிவகுப்பில் 225 காவலர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் காவல்துறை கொடி அணிவகுப்பு
X

கோவையில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்த காலனி பகுதியில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் உக்கடம் காவல் நிலைய எல்லை,காட்டூர் காவல் நிலைய எல்லை, சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லை, ஆர்.எஸ் புரம் காவல் நிலைய எல்லையை சேர்ந்த 225 காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கொடி அணிவகுப்பானது சிவானந்த காலனியில் துவங்கி கண்ணப்ப நகர், இரத்தினபுரி வழியாக 60 அடி ரோட்டை வந்தடைந்தது.

இந்த கொடி அணிவகுப்பில், கோவை மாநகர காவல்துறையினருக்கு ரோந்து பணிக்காக அளிக்கப்பட்ட புதிய சிவப்பு நிற ரோந்து வாகனங்கள் (8 வாகனங்கள்) இடம்பெற்றன. கொடி அணிவகுப்பிற்கு முன்புறம் காவல்துறையினரின் இசை வாத்திய குழுவினர் தேசிய பாடல்களை இசைத்தபடி சென்றனர்.

Updated On: 8 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  2. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  4. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  5. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  6. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  10. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்