/* */

குப்பை கிடங்கில் சிக்கி பெண் ஊழியர் பரிதாப உயிரிழப்பு: போலீசார் விசாரணை

வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்டும்போது பெண் ஊழியர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குப்பை கிடங்கில் சிக்கி பெண் ஊழியர் பரிதாப உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X

பெண் ஊழியர் சிக்கி உயிரிழந்த குப்பைக்கிடங்கு.

கோவை மாவட்டம், வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து எரிக்கப்படும். இந்நிலையில் இன்று வழக்கம் போல் குப்பைகளை ஏற்றி வந்த டிப்பர் லாரி பணியாளர்கள் குப்பைகளை கொட்டிய போது லாரியின் பின்புறம் அங்கு பணிபுரியும் சிவகாமி என்ற பெண் ஊழியர் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது குப்பைகள் அவர்கள் மீது கொட்டியதாக கூறப்படுகிறது. இதில் குப்பைகளுக்கிடையே மாட்டிய நிலையில் அவர் சத்தமிடவே சக ஊழியர்கள் குப்பைகளை அகற்றி அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் மூச்சு திணறி உயிரிழந்துவிட்டார்.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஊழியர் நின்று கொண்டிருந்தது தெரியாமல் லாரி பணியாளர்கள் குப்பைகளை கொட்டினார்களா அல்லது தெரிந்தே கொட்டினார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 April 2022 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...