/* */

கோவை மாவட்டத்தில் காலாவதி உணவு விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை

கோவையில், காலாவதி உணவுப் பொருள் விற்பனை தொடர்பான சோதனை நடத்திய அதிகாரிகள், இது தொடர்பாக கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

HIGHLIGHTS

கோவை மாவட்டத்தில் காலாவதி உணவு விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை
X

கோவையில், கடைகள் சிலவற்றில், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 7 குழுவினர், கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவ்வகையில், கோவை அவினாசி சாலை, பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம், மசக்காளிபாளையம், காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில், கடைகள், வணிக வளாகங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது, 69 கடைகளில் இருந்து 423 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 41 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006, உட்பிரிவு 55, 63-ன் கீழ், அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

அதேபோல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய, 15 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் அதிகாரிகள் விதித்தனர்.

Updated On: 23 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு