கோவையில் ஒரே நாளில் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு : 2 பேர் உயிரிழப்பு

கோவையில் ஒரே நாளில் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு : 2 பேர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை

கோவையில் ஒரே நாளில் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 2 பேர் உயிரிழப்பு

கோவையில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 6 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 602 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 56 ஆயிரத்த 553 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2895 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 183பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 132 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று இரண்டு பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2526ஆக உள்ளது.

Tags

Next Story
why is ai important to the future