கோவையில் இன்று 1897 பேருக்கு கொரோனா தொற்று; 3 பேர் உயிரிழப்பு

கோவையில் இன்று 1897 பேருக்கு கொரோனா தொற்று; 3 பேர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை.

கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 559 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 559 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கோவையில் இன்று 1897 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 16 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 23548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 3577 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 467 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2571 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story