கோவையில் புதிதாக 3786 பேருக்கு கொரோனா தொற்று ; ஒருவர் உயிரிழப்பு

கோவையில் புதிதாக 3786 பேருக்கு கொரோனா தொற்று ; ஒருவர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை

கோவையில் புதிதாக 3786 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது; ஒருவர் உயிரிழந்தார்.

கோவையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, இன்று தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 126 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 3786 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 91 ஆயிரத்த 412 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 24792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 2142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 74 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2546ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare