கோவையில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று ; ஒருவர் உயிரிழப்பு

கோவையில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று ; ஒருவர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை

கோவை மாவட்டத்தில், நேற்றைய தினத்தை விட இன்று 25 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 25 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்புகள் மீண்டும் நூறைக் கடந்துள்ளது. கோவையில் இன்று 105 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 53 ஆயிரத்த 634 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில், இன்று கொரோனா தொற்றில் இருந்து 86 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 217 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2518ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?