/* */

கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்

Protests Today - கோவை கணபதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்கள்.

Protests Today - கோவை கணபதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒப்பந்த முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நல குழுவினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கணபதி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள், கோவை மாநகராட்சியில் 13 ஆண்டுகள் தூய்மைப் பணி செய்யும் பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு தூய்மை பணி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். தினசரி ஊதியமாக 707 வழங்க வேண்டும். அதேபோல் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களது கோரிக்கைக்கு மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக வஉசி மைதானம் அல்லது மாநகராட்சி பிரதான அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Jun 2022 11:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  5. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  7. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  8. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  9. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  10. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...