/* */

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது வழக்குப்பதிவு

மருத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லாமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல், வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார்.

HIGHLIGHTS

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது வழக்குப்பதிவு
X

பெரிய கடை வீதி காவல் நிலையம்.

கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். நகை பட்டறை தொழிலாளியான இவருடைய மனைவி புண்ணியவதி. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் புண்ணியவதி மீண்டும் கர்ப்பமானதால் 4வது குழந்தை என்பதால் மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது. இதனிடையே நிறைமாத கர்ப்பிணியான அவர், மருத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லாமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல், வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால் ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தொப்புள்கொடி சரியாக அறுபடாமல், பிரசவமும் சரியாக இல்லாததால் குழந்தையும், தாயும் மயங்கினர். அப்போது அங்கு வந்த குடும்பத்தினர் 2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசுக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சரியாக பிரசவம் பார்க்காதால் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்த பெரியகடை வீதி காவல்நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315 (குழந்தை செத்துப்பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் சாக வேண்டும் என்று செயல்படுவது) என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 7 Dec 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்