/* */

அதிமுகவினருக்கு மெசினை மாற்ற தெரியாது: எஸ்.பி.வேலுமணி

திமுக, தேர்தல் ஆணையம், காவல்துறை ஆகிய மூவரும் கூட்டணி போட்டு மக்களை தோற்கடித்துவிட்டனர் என எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு.

HIGHLIGHTS

அதிமுகவினருக்கு மெசினை மாற்ற தெரியாது:  எஸ்.பி.வேலுமணி
X

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் .

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, காவல்துறையினருக்கு இந்த கூட்டத்தை பார்த்தாலே இது ஆளும்கட்சியா, எதிர்கட்சியா என சந்தேகம் ஏற்பட்டுவிடும் என பேசினார்.

தொண்டர்கள் எழுச்சியுடன் வந்தது கோவை மாவட்ட மக்களை காப்பாற்றுகிற ஒரே கட்சி அதிமுக என்பதை நிருபித்துள்ளது. திமுக ஆட்சியில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது வழக்கம், ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் 12 வழக்குகள் உடைய கள்ள ஓட்டு போட வந்த ரவுடியை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார் எனவும் போலீஸ் செய்யாத வேலையை ஜெயக்குமார் செய்தததால், ஜெயக்குமாரை முடக்கும் எண்ணத்தில் கைது செயப்பட்டுள்ளார் எனவும் குற்றம் சாட்டினார்.

கோவையில் ஏராளமான அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது எனவும் இது வெட்ககேடாக விஷயம், பணம், பரிசு, கொலுசு என போலீசை வைத்து வீசி எறிந்தார்கள், ஆனால் வழக்கு மட்டும் அதிமுகவினர் மீது போடப்படுகிறது என்றார். அதிமுகவினருக்கு பிராடு பண்ணத் தெரியாது, மெசினை மாற்ற தெரியாது எனவும் நியாயப்படி தேர்தல் நடந்திருந்தால் கோவை மாநகராட்சியில் 85 இடங்களில் அதிமுக வென்றிருக்கும், அதை மாற்றியுள்ளார்கள் எனக்கூறினார்.

முழுமையாக விஞ்ஞான முறையில் அதிமுக ஜெயிக்கும் இடங்களை சர்வே எடுத்து, அதிமுகவிற்கு விழுந்த ஓட்டை திமுகவிற்கும், திமுகவிற்கு விழுந்த ஓட்டை அதிமுகவிற்கும் மாற்றி எங்கள் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர் எனவும் இது அப்பட்டமான ஜனநாய படுகொலை எனவும் கூறினார். இதனை மீறி வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர் மீது வழக்கு போட்டும், குடும்பத்தையினரையும் மிரட்டி வருகின்றனர் எனவும் இதற்கு காவல் துறை வேறு வேலை பார்க்க போகலாம் என விமர்சித்த அவர் பணியிடமாற்றம் செய்வதை தவிர திமுக வேறு என்ன செய்து விட முடியும் என கேள்வி எழுப்பிய அவர் திமுகவிற்கு அடிமையாக காவல் துறை இருப்பதற்கு வெட்கமாக இல்லையா? இதை நிறுத்திக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.

எவ்வளவு பொய் வழக்கு போட்டாலும் அஞ்ச மாட்டோம் எனவும் உள்ளாட்சி தேர்தல் வெற்றி செயற்கையான வெற்றி, பிராடு செய்து ஜனநாயகத்தை படுகுழிக்குள் தள்ளியுள்ளார்கள், இது நிரந்தரம் இல்லை இந்த ஆட்சிக்கு முடிவு வரும் என பேசிய அவர், போலீஸ் அடிபணிந்து திமுகவினர் காலை கழுவுகிறார்கள், தயவு செய்து மானம் மரியாதை உடன் இருங்கள் என காட்டமாக விமர்சித்தார். திமுகவிற்கு ஓட்டு போட ஒரு காரணமும் இல்லை எனவும் 9 மாதத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எனவும் எதுவும் செய்யாமல் எப்படி ஓட்டு போட்டார்கள் எனவும் கூறிய அவர் தேர்தலுக்கு பிறகு மக்களிடம் சர்வே செய்த போது, அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதாக சொல்கிறார்கள் எனவும் பேசினார்.

ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் இனியாவது கோவைக்கு திமுக எதாவது செய்ய வேண்டும் எனவும் அத்தனை திட்டங்களும் தாங்கள் கொண்டு வந்தது தான் எனவும் அவர் கூறினார். அதிகாரிகள், போலீஸ்காரர்கள், திமுக என மூவர் கூட்டணி போட்டு மக்களை தோற்கடித்து விட்டார்கள் எனவும் ஜனநாயகத்தை தோற்கடித்துள்ளார்கள் எனவும் அவர் விமர்சித்தார். திமுகவிற்கு கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஜல்ரா போடுகிறார்கள் எனவும் இதற்கு முன்பு கம்யூனிஸ்ட்கள் இதுபோல இல்லை எனவும் அதிகாரிகள், காவல் துறை, திமுகவினரின் முறைகேடுகளால் தோற்கடிக்கப்பட்டோம் எனவும் கூறினார். தொண்டனுக்கும், மக்களுக்கும் பிரச்சனை என்றால் நேரடியாக வருவோம் எனவும் கோவையில் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதோடு, எல்லா இடங்களிலும் இலஞ்சம் அதிகரித்துள்ளதாகவும் அதிமுகவினர் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 28 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...