இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளம்பெண்.. தொழிலதிபர் ஏமாந்த கொடுமை

இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளம்பெண்.. தொழிலதிபர் ஏமாந்த கொடுமை
X

ஹேசல் ஜேம்ஸ்.

மும்பை தொழிலதிபரிடம் ரூ.20 லட்சத்தை சுருட்டிய கோவை இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 44). இவர் மும்பையின் ரயில் நிலையம் ஒன்றில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின்மூலம் லோரேன் மூலமாக அவரது சகோதரி ஹேசல் ஜேம்ஸ் என்ற இளம்பெண்ணுடன் ராஜேஷ்க்கு நட்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.

ஹேசல் ஜேம்ஸ், கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும், சிறிது நாட்கள் கழித்து தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் ராஜேஷிடம் பழகி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து , அவரது கணவர் இறந்து விட்டதாகவும், மீண்டும் கணவர் இறக்கவில்லை என்றும் விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதால் தந்தையுடன் வசித்து வருகிறேன். இதனால் தனக்கு ஏராளமான கஷ்டங்கள் இருந்து வருகிறது. எனவே ரூ.90 ஆயிரத்தை கடனாக கொடுக்குமாறு ராஜேஷிடம் கேட்டுள்ளார். மேலும் தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தான் சொந்தமாக தொழில் செய்வதாகவும் அதற்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.

ஹேசல் ஜேம்ஸ்க்கு உதவ நினைத்த ராஜேஷ், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், அழகு சாதன பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கி ஹேசலுக்கு கொடுத்துள்ளார்.

ஹேசல் ஜேம்ஸ்க்கு ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவரிடம் தொடர்பு மற்றும் பல ஆண்களிடம் பழக்கம் இருந்தது ராஜேஷுக்கு தெரியவர, அவர் அதிர்ந்து போனார். இது குறித்து ஹேசல் ஜேம்ஸிடம் கேட்டபோது, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது என ஹேசல் ஜேம்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இதையடுத்து தான் ராஜேஷுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ், ராஜேஷ் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அதன் பிறகு ஹேசலை தொடர்பு கொண்ட ராஜேஷ், தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் பணத்தை திருப்பி தர முடியாது என்றும் பணத்தை திருப்பி கேட்டால் தன் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி இருக்கிறார்.

இந்த நிலையில் சில காலம் அமைதியாக இருந்த ராஜேஷ், மீண்டும் தனது பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ், ‘20 லட்சம் ரூபாய் பணத்தை உனக்கு கொடுப்பதற்கு பதில் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது’ என கூறி மிரட்டி இருக்கிறார்.

உடனே ஆத்திரமடைந்த ராஜேஷ், கோவைக்கு வந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஹேசல் ஜேம்ஸ் மீது புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து இந்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஹேசல் ஜேம்ஸ் பலரிடம் திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து போத்தனூர் போலீசார் மும்பை தொழிலதிபர் ராஜேஷ்-ஐ ஏமாற்றி பழகி பணம் பறித்தது தொடர்பாகவும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் ஹேசல் ஜேம்ஸ் மீது 420, 406, 506 (2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story