/* */

3 மாதங்களுக்கு பிறகு களைகட்டியது சென்னை உள்நாட்டு விமான நிலையம்!

3 மாதங்களுக்கு பிறகு விமானங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் மீண்டும் கலைகட்டத் தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

3 மாதங்களுக்கு பிறகு களைகட்டியது சென்னை உள்நாட்டு விமான நிலையம்!
X

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தொற்று பீதியால் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரலில் வெகுவாக குறைந்து இருந்தது. இதனால் விமான சேவைகளும் குறைக்கப்பட்டது.

முன்னதாக 70 விமானங்கள் வரை இயக்கப்பட்டு சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை மட்டுமே பயணித்தனர். போதிய பயணிகள் இல்லாமல், தினமும் 90 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் தொற்று குறைய தொடங்கியதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களாக பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது .

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மே இறுதி வாரத்தில் புறப்பாடு விமானங்கள் 40, வருகை விமானங்கள் 40 என மொத்தம் 80 விமானங்கள் இயக்கப்பட்டு அதில் 4 ஆயிரம் பேர் மட்டுமே பயணித்தனர். தற்போது புறப்பாடு விமானங்கள் 51 ஆக அதிகரித்து, வருகை விமானங்கள் 53 என மொத்தம் 104 விமானங்களாக உயர்ந்துள்ளது.

அதைப்போல் பயணிகள் எண்ணிக்கையும் 5 ஆயிரத்திற்கும் மேல் சென்றது, 3 மாதங்களுக்கு பிறகு இன்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை 100யை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Jun 2021 4:58 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!