/* */

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்  வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
X

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வருபவர் வெங்கடாசலம். இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து வெளியான முதல்கட்ட தகவலின்படி, ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம், கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது வரை அவர் தான் இதே பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் பணியில் இருக்கும்போது விதிமுறையை மீறி சொத்துகள் சேர்த்ததாக தகவல் ஒன்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைக்கப்பெற்றது. அந்த தகவலின் அடிப்படையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தில் மதியம் 12 மணிமுதல் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, வேளச்சேரியில் உள்ள அவரின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.

Updated On: 24 Sep 2021 3:56 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!