சென்னை: திருவெற்றியூரில் சென்டர் மீடியனில் மோதி இளைஞர் பலி

சென்னை: திருவெற்றியூரில் சென்டர் மீடியனில் மோதி இளைஞர் பலி
X
சென்னை, திருவெற்றியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், சென்டர் மீடியனில் மோதி பரிதபமாக இறந்தார்.

சென்னை திருவொற்றியூர் திருச்சினாம்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் 25, மீனவர். இவர், எண்ணூர் விரைவு சாலை வழியாக பாரதி நகரில் இருந்து, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எம் எப் எல் சந்திப்பு அருகே, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் அங்கு உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிலை தடுமாறி அப்பாஸ் கீழே விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அப்பாஸ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?