/* */

கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி

திருவொற்றியூர் அருகே, கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் - தங்கை இருவர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி
X

விபத்தில் பலியான அண்ணன் - தங்கை. 

சென்னை மணலி எம் எப் எல் சந்திப்பில் கன்டெய்னர் லாரி ஒன்று தாறுமாறாக ஓடி எதிரில் நின்ற மற்றொரு கன்டெய்னர் லாரியில் மோதியது. அப்போது, லாரியில் இருந்த கண்டைனர் சரிந்து கீழே விழுந்தது. இதில், சென்னை ராயபுரத்தில் இருந்து மணலிபுதுநகரில் உள்ள கோவிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சீனிவாசன் வயது 51 மற்றும் அவரது தங்கை நிவேதா 45 ஆகிய இருவரும் சரிந்து விழுந்த கன்டெய்னர் பெட்டியின் உட்புறமாக சிக்கிக் கொண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

இருவரின் உடலை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, கன்டெய்னர் லாரி ஓட்டுநர் பண்டார வேலன் வயது 38 என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 May 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்