வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: மறுவாக்குப்பதிவு கேட்டு கட்சியினர் முற்றுகை

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: மறுவாக்குப்பதிவு கேட்டு கட்சியினர் முற்றுகை
X
திருவொற்றியூர் 12வது வார்டில் இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் குழப்பம், மறுவாக்குப்பதிவு கேட்டு முற்றுகை.

திருவொற்றியூர் 12 வது வார்டில் சென்னை பெருநகர மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த வார்டில் 140 வாக்குகள் இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. 140 வாக்கு பதிவுகள் நடந்துகொண்டிருக்கும் போது இயந்திரம் பழுதுபட்டது. அதை சரி செய்ய முயற்சித்தபோது, அது நேற்றைய தேதியில் அந்த வாக்குகள் பதிவானதாக காட்டப்பட்டது. இதையடுத்து அந்த இயந்திரத்தை மாற்றிவிட்டு வேறு ஒரு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. அந்த இயந்திரத்தில் 36 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இயந்திரம் பழுது ஏற்பட்டது. இதனால் மூன்றாவது வாக்கு இயந்திரம் கொண்டு வரப்பட்டு நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றுள்ளனர். மேலும் நேற்றைய தேதியில் வாக்கு பதிவாகியுள்ளதால் தேர்தல் அதிகாரிகள் அதை எப்படி எடுப்பார்கள் என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வாக்குச் சாவடி மையத்திற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்

Tags

Next Story
ai in future agriculture