திருவொற்றியூர் கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்- போலீஸ் விசாரணை
சென்னை, திருவொற்றியூர் கே வி குப்பம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடற்கரைக்கு வந்த மக்கள், இதுபற்றி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார், கரை ஒதுங்கிய உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் வேலை கொண்டு சென்ற அரசு ஸ்டான்லி ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்து கிடந்த அந்த நபர் எந்த ஊர் சேர்ந்தவர்? கடலில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்து விட்டாரா? முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்து பிணத்தை கடலில் வீசினார்களா என்ற கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu