/* */

திருவொற்றியூர்: விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து பலி

திருவொற்றியூர் அருகே, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

திருவொற்றியூர்: விளையாடிக் கொண்டிருந்த  சிறுவன் மயங்கி விழுந்து பலி
X
தினேஷ் குமார் 

திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டை நரசய்யா தெருவை சேர்ந்தவர். கார்த்திக்; இவரது மனைவி செல்வசங்கரி இவர்களின் மகன் தினேஷ் குமார் (வயது 10). வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

தந்தை கார்த்திக் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தாய் செல்வசங்கரி அதே பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்து, மகனை காப்பாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் தினேஷ்குமார் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த செல்வசங்கரி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு கொண்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தினேஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட தாய் செல்வ சங்கரி கதறி அழுதார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார் திடீரென மயங்கி விழுந்து இறந்த காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்றனர்.

Updated On: 29 April 2022 11:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!