/* */

கோஷ்டிபிரச்சினையை தீர்க்க டெல்லி செல்லும் நிலையில் அதிமுக, கே. பாலகிருஷ்ணன்

கோஷ்டி பிரச்சினையை தீர்க்க டெல்லி செல்லும் நிலையில் அதிமுக உள்ளது என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிஷ்ணன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

கோஷ்டிபிரச்சினையை தீர்க்க டெல்லி செல்லும் நிலையில் அதிமுக, கே. பாலகிருஷ்ணன்
X

சென்னையில் பேட்டி அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.. இதில் கடந்த 23 முதல் 25 வரை ஆகிய தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்* செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியதாவது:

பாஜக அரசு நாள்தோறும் மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அடுத்தடுத்து மோசமான மசோதாக்களை நிறைவேற்ற முயற்சி செய்கிறது.

ஒளிப்பதிவு மசோதா, கடல் ஒழுங்காற்று மசோதா, 3 வேளாண் சட்டம், தொழிலாளர் சட்டங்கள் ஆகிய மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருகிறது. ஸ்டான் சுவாமி மரணம் இயற்கையான மரணம் இல்லை அது ஒரு நிறுவனப் படுகொலை

கோஷ்டி பிரச்சினையை தீர்க்க டெல்லி செல்லும் நிலைக்கு அதிமுக சென்றுள்ளது. அதிமுக எவ்வளவு பலவீனமான நிலையில் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, 2 மாதத்தில் திமுக அனைத்து திட்டங்களுக்கும் நிறைவேற்ற முடியாது.

10 ஆண்டுகளில் எவ்வளவோ கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கலாம், ஆனால் அக்கட்சி அதனை செய்யவில்லை. திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் தார்மீக உரிமை அதிமுகவுக்கு இல்லை

கெயில் எரிவாயு திட்டத்தில் மக்களின் வாழ்வாதார பிரச்சனை வரும் போது திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம், வலியுறுத்துவோம் இதில் எந்த சமரசம் இல்லை.

கூட்டணி கட்சிகள் எல்லா பிரச்சனைகளையும் ஒத்த கருத்துடன் இருப்பார்கள் இல்லை, பாஜகவை, அதிமுகவை எதிர்க்கும் கொள்கையின் படி ஒன்றிணைந்து செயல்பட்டது. அந்த வகையில் அரசியல் கனவை மார்சிஸ்ட் கட்சி நிறைவேற்றி உள்ளது.

கியூபா மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க அரசை கண்டித்து விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து 29 ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் போராட்டம் நடத்தப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 26 July 2021 1:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்