/* */

செல்போன் பேசியபடி மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

சென்னையில், மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து, விமான நிலைய ஊழியரின் மகன் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

செல்போன் பேசியபடி மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
X

நாகராஜ்

சென்னை விமான நிலைய வளாகத்தில் ஊழியா்கள் குடியிருப்பு உள்ளது. அதில் வசிப்பவா் விஜயகுமாா். இவா் சென்னை விமான நிலையத்தில் ஹவுஸ்கீப்பிங் பிரிவில் பணியாற்றுகிறாா். விஜயகுமாரின் மகன் நாகராஜ் (வயது-23). இவா், மீனம்பாக்கத்தில் உள்ள தனியாா் செல்போன் ஷோரூமில் பணியாற்றி வந்தாா்.

நாகராஜ், விமான நிலைய ஊழியா் குடியிருப்பு மொட்டை மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது 2 வது மொட்டை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா். உடனடியாக அவரை பல்லாவரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதையடுத்து, நாகராஜ் உடலை, தந்தை விஜயகுமாா் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டாா். அதோடு இறுதி சடங்குகள் செய்ய தயாரானாா்கள். இந்நிலையில் சென்னை விமான நிலைய போலீசுக்கு இதுபற்றிய தகவல் கிடைத்தது. உடனடியாக விமான நிலைய போலீசாா் விரைந்து வந்து, நாகராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 16 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...