/* */

கோயம்பேடு மார்க்கெட்டில் 85% பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் சேகர்பாபு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், இதுவரை 85% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

HIGHLIGHTS

கோயம்பேடு மார்க்கெட்டில் 85% பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் சேகர்பாபு
X

அமைச்சர் சேகர் பாபு.

சென்னை கோயம்பேட்டில், மாநகராட்சி சார்பில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களை, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிபவர்களில் 85 சதவீதம் பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதம் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தவறு எங்கே நடைபெற்றாலும், நிச்சயமாக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். மதுரைக்கு சென்றிருந்தபோது பழமுதிர்ச்சோலைக்கு சொந்தமான 381 ஏக்கர் நிலத்தில் விளையும் பூக்களை, இறைவனுக்கு காணிக்கையாக்க வேண்டும் என்று ஜமீன்தாரர்கள் எழுதி வைத்து சென்றுள்ளனர். அந்த இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அது மீட்கப்படும். குயின்ஸ் லேண்ட் வசம் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை, சட்டப் போராட்டம் நடத்தி மீட்க தேவையான பணிகளில் இந்து சமய அறநிலைத்துறை ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 27 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  7. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  8. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  9. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  10. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...