புழல் ரெட்டேரி குளிக்க சென்றவர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு
சென்னை எருக்கஞ்சேரி காந்திநகர், 4 வது தெருவை சேர்ந்தவர் அஜய் (வயது 18 ). இவர் வியாசர்பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் 7 பேர் புழல் அடுத்த எம்ஜிஆர் நகர் இரட்டை ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது அஜய் நீச்சல் தெரியாமல் தண்ணிரில் தத்தளித்து சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார். அவருடன் குளித்த நண்பர்கள் இதனை அறிந்து அஜய் இருக்கும் பகுதிக்கு சென்று அவரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். சேற்றில் சிக்கிய அவரை வெகு நேரம் போராடியும் காப்பாற்ற முடியாமல் பரிதவித்தனர்.
இதுகுறித்து புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில், அம்பத்தூர் செங்குன்றம் ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து வாலிபரை, ரப்பர் படகு மூலமும் நீச்சல் அடித்தும் மாலை நேரம் வரை தேடிய வீரர்கள் அவரை நேற்றிரவு சடலமாக மீட்டனர்.பின்னர் புழல் போலீசார் உடலை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu