/* */

கொடுங்கையூரில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு

கொடுங்கையூரில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கொடுங்கையூரில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு
X

திருஞானம்

சென்னை மாதவரம் அடுத்த கொடுங்கையூர் ஜம்புலிங்கம் காலனியில் கடந்த ஆறு மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வருபவர் திருஞானம் (வயது 40). வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

மேலும் இவர் விடுமுறை நாட்களில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் கார்கள் சுத்தம் செய்யும் வேலையும் செய்து வந்தார். இந்த நிலையில் கொடுங்கையூர் ஜம்புலிங்கம் நியூ காலனி தாமோதரன் தெருவில் ஒரு வீட்டில் கார் சுத்தம் செய்ய சென்றபோது சாலையில் மின்சார வயர் அறுந்து தொங்குவதை பார்த்து அகற்றச் சென்ற போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த மனைவி சரஸ்வதி கூச்சலிடவே உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  3. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  5. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  6. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  7. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  8. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  9. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  10. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!