இங்கிலாந்தில் பென்னிகுக் சிலை திறப்பு விழா: முதலமைச்சருக்கு அழைப்பு

இங்கிலாந்தில் பென்னிகுக் சிலை  திறப்பு விழா:  முதலமைச்சருக்கு அழைப்பு
X

இங்கிலாந்தில் நடைபெற்றவுள்ள பென்னிகுக் உருவச்சிலை திறப்பு விழாவுக்கு தமிழக முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்த பென்னிகுக் ஆராய்ச்சியாளர் சந்தான பீர்ஒலி.

சிலை அமைக்கும் பணி ஜூலை மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை இங்கிலாந்தில் நிறுவும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்துக்கொள்ள வேண்டும் என்று பென்னிகுயிக் ஆராய்ச்சியாளர் சந்தான பீர்ஒளி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்..

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரை நேரில் சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்னல் ஜான் பென்னிகுக்கின் புதிய சிலையை இங்கிலாந்தில் உள்ள அவர் பிறந்த ஊரான கேம்பர்ளி உள்ள மைய பூங்காவில் தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரு மகிழ்ச்சி அடைவதாகவும், சிலை நிறுவுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், பணிகள் தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாக கூறிய அவர், சிலை அமைக்கும் பணி ஜூலை மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் லண்டன் நாட்டின் மைய பூங்காவிற்கு நேரில் வந்து சிலையை திறந்து வைக்க வேண்டும் எனவும், அரசு மரியாதை அளிக்க தயாராக உள்ளதாகவும் பென்னிகுக் ஆராய்ச்சியாளர் சந்தான பீர்ஒலி தெரிவித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!