/* */

மாதவரம் அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்:எம்எல்ஏ பங்கேற்று துவக்கம்

Makkaludan Muthalvar Special Camp மாதவரம் அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பங்கேற்றார்.

HIGHLIGHTS

மாதவரம் அருகே மக்களுடன் முதல்வர்   சிறப்பு திட்ட முகாம்:எம்எல்ஏ பங்கேற்று துவக்கம்
X

சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம்எம்எல்ஏவுமான  எஸ்.சுதர்சனம் பொதுமக்கள் மனு வழங்கும்  நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

Makkaludan Muthalvar Special Camp

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் என்னும் இல்லம் தேடி அரசு சேவை முகாம் புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி ரமேஷ் தலைமையில் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சரவணன்,மாவட்ட பிரதிநிதி ரமேஷ்,புழல் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணி திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக புழல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிசேகரன், சித்ரா பெர்னாண்டோ ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்து நிகழ்ச்சினை துவக்கி வைத்தார்.பின்னர் இம்முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் எரிசக்திதுறை, வருவாய் மற்றும் மருத்துவதுறை, பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கூட்டுறவுத்துறை,ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் வாழ்வாதார கடன் உதவிகள் உள்ளிட்ட 21 துறைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான கோரிக்கை மனுக்களை பெற்று கணினியில் பதிவு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது.

இதில் ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட இயக்குனர் ரூபேஷ் குமார், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன், சரக உதவியாளர் ராஜா ராபர்ட், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சாய் கணேஷ், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா கல்விநாதன், புள்ளிலைன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாதவன், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி மாணிக்கம், ராஜ்குமார், ஊராட்சி செயலர்கள் பொன்னையன், டில்லி, தேவகி, உல்லாசம், மகேந்திரன், யுகேஸ்குமார் உள்ளிட்ட அனைத்து துறை நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Jan 2024 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!