மாதவரத்தில் செப்.20ம் தேதி நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் தொடக்கம்

மாதவரத்தில் செப்.20ம் தேதி நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் தொடக்கம்
X
சென்னை அருகே மாதவரத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும் 20ம் தேதி துவங்குகிறது.

சென்னை மாதவரம் பால் பண்ணை, குமாரப்பாபுரத்தில் உள்ள மத்திய பனை பொருட்கள் நிறுவன பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, செப்டம்பர் 20ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்களுக்கு இப்பயிற்சி நடக்க உள்ளது.

இதில் தங்கத்தின் விலை மதிப்பிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, தரம் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில், 18 வயது நிரம்பியவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 94437 28438 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?