/* */

மாதவரத்தில் சிறுமி பாம்பு கடித்து மருத்துவமனையில் உயிரிழப்பு

சென்னை மாதவரத்தில் சிறுமி பாம்பு கடித்து மருத்துவமனையில் உயிரிழந்தாள்.

HIGHLIGHTS

மாதவரத்தில் சிறுமி பாம்பு கடித்து மருத்துவமனையில்  உயிரிழப்பு
X

உயிரிழந்த டார்லியா.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42) இவர் மரக் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு 6 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உண்டு.

இவர்களில் டார்லியா( வயது 6) என்ற குழந்தை அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தாள். இந்நிலையில் இரவு சுமார் 9 மணியளவில் வீட்டு முற்றத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு டார்லியாவை கடித்ததாக கூறப்படுகிறது.

இதில் உடம்பெல்லாம் விஷம் ஏறி வலியால் துடித்த குழந்தையை பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது .ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை இறந்து விட்டது. தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Updated On: 8 April 2022 6:10 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...