/* */

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை காெள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி மொண்டியம்மன் நகரில் வீடுபுகுந்து 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை. மர்மநபர்கள் கைவரிசை.

HIGHLIGHTS

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை காெள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி மொண்டியம்மன் நகர் சிவகாமி அம்மையார் தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 38).இவர் காரனோடை பகுதியில் மோட்டார் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்றிருந்த நிலையில் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் மேல் வீட்டில் குடியிருந்த கிருபாகரனின் தாயார் உலகரசி கீழே வந்து பார்த்த போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் பிரபாகரனுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். உடனடியாக பிரபாகரன் வந்து வீட்டை பார்த்துவிட்டு பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்துக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Jun 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  7. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  10. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?