/* */

பாடியநல்லூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இரத்த தான முகாம்

பாடியநல்லூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இரத்த தான முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாடியநல்லூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இரத்த தான முகாம்
X

இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த மாபெரும் இரத்ததான முகாமை சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் தொடங்கி வைத்தார்.

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக பொதுக்கூட்டம் நடத்தி நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான மீ.வே. கர்ணாகரன் தலைமையில் சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரத்ததான முகாமை துவக்கி வைத்து, இரத்தம்தானம் செய்த 200.க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்கள், உணவும், ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா.செல்வசேகரன், சோழவரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஏ.காசிம் முகம்மது, துணைச் செயலாளர்கள் கே.எம். துரைவேல், ப.சீனிவாசன், கே.வீரம்மாள், பொருளாளர் செ.அரசு, மாவட்ட பிரதிநிதிகள் இரா.விஜயன், பா.சேகர், பொன்.கோதண்டன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் நா.பரசுராமன், ஒன்றியக் கவுன்சிலர்கள், சோழவரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி, மாணவரணி, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, மகளிரணி, கிளை கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 March 2023 9:52 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  3. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  6. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  7. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  9. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  10. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை