/* */

ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் கைது

ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்து ஆபாசமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் கைது
X

ரயிலில் பெண் ஒருவரிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்தும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கபிலா என்ற பெண் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை திடீரென காண்பித்துள்ளார். அதை சற்றும் எதிர்பாராத அப்பெண் அதிர்ச்சி அடைந்து தனது செல்போனில் அவரது செயலை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பின்னர் அவரிடம் சண்டையிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த நபருக்கும் அப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் நான் போலீஸ் தான் உன்னால் என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிக்கொள் என்று பெண்ணிடம் சவால் விடுத்துள்ளார். பின்னர் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே அந்த ஆசாமி பாதியில் ரயிலில் இருந்து தப்பி குதித்து சென்றுள்ளார்.

இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் ரயில்வே காவலர்களிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி புகார் அளித்ததோடு அந்த வீடியோக்களையும் சமர்ப்பித்துள்ளார் . இந்த புகாரில் விசாரணை நடத்திய ரயில்வே போலீசார் சி.சி.டி.வி. ஆதாரங்கள் மற்றும் வீடியோக்களை சரி பார்த்ததில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பதை உறுதி செய்தனர். பின்னர் வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலரே இப்படி கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 19 Nov 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  6. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  7. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  8. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  9. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  10. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...