சென்னையில் சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது: போலீசார் அதிரடி

சென்னையில் சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது: போலீசார் அதிரடி
X

பைல் படம்.

சென்னை கொடுங்கையூரில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மது விற்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கொடுங்கையூரில் டாஸ்மாக் கடை ஒன்றில், 'பாரில்' இரவு நேரங்களில், சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் நடத்திய சோதனையில், பாரில் மது விற்ற சிவகங்கை, தேவகோட்டை, சிதம்பர நாதா தெருவைச் சேர்ந்த பார் நிர்வாகி கண்ணன், சிவகங்கை, பேராணமலை, தெய்வசிகாமணி தெருவைச் சேர்ந்த வைரவன், ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 36 மதுபாட்டில்கள், 15 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
why is ai important to the future