/* */

முத்துமாரியம்மன் ஆலயத்தில் 108.பால்குடம் எடுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு

கிராண்ட்லையன் ஊராட்சி விஷ்ணு நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமி விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

முத்துமாரியம்மன் ஆலயத்தில் 108.பால்குடம் எடுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு
X

கிராண்ட்லையன் ஊராட்சி விஷ்ணு நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்திய பக்தர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி. புழல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராண்ட்லையன் ஊராட்சி விஷ்ணு நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2-ம் ஆண்டு சித்திரை பௌர்ணமி விழா ஆலய நிர்வாகிகள் தலைவர் லெனின், ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கணபதி பூஜையுடன் விரதம் இருந்த சுமார் 108-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலயத்திலிருந்து தங்கள் தலையில் பால்குடம் சுமந்தபடி விஷ்ணு நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து தங்களின் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர். அதேபோல் அம்மனுக்கு தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதணைத்தொடர்ந்து அம்மனுக்கு வண்ணமலர்கள் மற்றும் திருஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் கிராண்ட்லையன் ஊராட்சி மன்ற தலைவர் கமுதிஅரசு, வார்டு உறுப்பினர் லோகேஷ்வரிகார்த்திக் மற்றும் ஆலய நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், பபிதா, ரமணி, தேன்மொழி உள்ளிட்ட சுற்றுவாட்டார பக்ர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கினர்.

Updated On: 6 May 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்