போலீஸ் வாகனம் மீது லாரி மோதி விபத்து, போலீசார் காயம்

போலீஸ் வாகனம் மீது லாரி மோதி விபத்து, போலீசார் காயம்
பைல் படம்
அயனாவரத்தில் போலீஸ் வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர், வடமாநில லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை தலைமைச் செயலக காவலர் குடியிருப்பு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அதிகாலை 3 மணி அளவில் ஐசிஎப் சிக்னல் பகுதியிலிருந்து அயனாவரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது அயனாவரம் காவல் நிலையம் எதிரே வரும்போது எதிரே இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த போலீஸ் வாகனம் மீது மோதியது.

இதில் வாகனத்தை ஓட்டி வந்த ஆயுதப்படை காவலர் சந்திரகுமார் என்பவருக்கும் பெண் காவலர் கலையரசி என்பவருக்கும் மூக்கு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக வண்டியில் இருந்த மற்றொரு பெண் காவலர் தேன்மொழி மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி கொடுத்தனர்

சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்லால் ஜட் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story