/* */

தடுப்பூசி போடாதது ஏன்? சான்றுடன் நிரூபிக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதது ஏன்? என்பதற்கான காரணத்தை சான்றுடன் நிரூபிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

தடுப்பூசி போடாதது ஏன்? சான்றுடன் நிரூபிக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு
X

சென்னை போலீஸ் கமிஷனர்  சங்கர் ஜிவால்

சென்னையில் இதுவரை 84 சதவிகிதம் போலீசார் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதை 100 சதவீதமாக உயர்த்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், கொரோனா தொற்றுக்கு இதுவரை 84 போலீசார் பலியாகி உள்ளனர். ஆகவே நம்மை காக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் சென்னையில் 84 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில் இளம் வயதுடைய போலீசார் சிலர் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். உயர் அதிகாரிகள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போலீசார் அதற்கான தகுந்த காரணத்திற்கான மருத்துவ சான்றிதழை உயரதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 2 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்