/* */

சென்னை: ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு! மர்மம்!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெண் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. சாவில் மர்மம் இருப்பதாக கணவர் புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

சென்னை: ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு! மர்மம்!!
X

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை.

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் மவுலி. இவருடைய மனைவி சுதா. இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி சிகிச்சைக்காக மவுலி சேர்த்தார். அங்கு 3-வது மாடியில் சுதா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மறுநாள் சுதாவைப் பார்க்க மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார் மவுலி. ஆனால், அப்போது 3-வது வார்டில் மனைவி சுதா இல்லை. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார் மவுலி, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார். நிர்வாகத்தினர் சுதாவைத் தேடிப் பார்த்துவிட்டு காணவில்லை என்று கூறினர்.

அதனையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் மவுலி புகார் கொடுத்தார். அதன்பிறகும் அவரது மனைவியை கண்டுபிடிக்கவில்லை. இதனையடுத்து, காவல்நிலையத்திற்கு சென்று ஏன் என் மனைவியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று மவுலி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து மவுலியை அழைத்துக்கொண்டு, மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீசார் தீவிரமாக தேடினர். மருத்துவமனையின் 8-வது மாடியில் சுதாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதைப் பார்த்ததும் மவுலி கதறி அழுதார்.

புகார் கொடுத்த அன்றே தேடியிருந்தால், மனைவி உயிருடன் கிடைத்திருப்பார் என்று போலீசாரிடம் கதறினார். சுதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது கணவர் மவுலி குற்றம்சாட்டினார். உடனே, இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 Jun 2021 2:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது