/* */

வெளிநாடு செல்வோருக்கு முன் பயண புத்தாகப்பயிற்சி மையம்: அரசு அறிவிப்பு

இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியா குமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களில் மையம் அமைகிறது

HIGHLIGHTS

வெளிநாடு செல்வோருக்கு முன் பயண புத்தாகப்பயிற்சி மையம்: அரசு அறிவிப்பு
X

பைல் படம்

அயல் நாடுகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காக செல்லும் தமிழர்கள் நலன் கருதி இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர்,சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் முன் பயண புத்தாக்கப் பயிற்சி மையம்அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழர்கள் தொன்று தொட்டு வணிகம், வியாபாரம், கல்வி போன்ற காரணங்களுக்காகபுலம்பெயர்ந்துள்ளனர். கால வளர்ச்சியில் பொருளாதார காரணங்களுக்காக தமிழர்கள்,வேலை வாய்ப்பிற்காக பிற நாடுகளுக்கு அதிகளவில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டன.இவ்வாறு வேலை வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்கள் பல்வேறு சூழ்நிலையால் சில நேரங்களில் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

அயல்நாடுகளுக்கு பணிக்கு செல்லும் தமிழர்கள் அங்கு அவர்களுக்கு உறுதியளித்தப்படி வேலை, வேலை நேரம், ஊதியம், உணவு, உறைவிடம், போன்ற பல்வேறு விசயங்கள் தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத் துறையை தொடர்பு கொள்கின்றனர்.அவ்வாறு அயலகத் தமிழர்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அயலகத் தமிழர்நலத்துறை மூலமாக அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்கள், தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் உதவியுடன் தீர்வு காணப்பட்டு வருகின்றன.

இது போன்ற குறைகளைச் சரிசெய்ய &ஹீuஷீt; கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகத் தமிழர்கள் புலம் பெயரும்போது, அவர்கள் செல்லும் நாட்டின் சட்டத்திட்டங்கள், கலாசாரம்,மொழி மற்றும் வேலை தொடர்பான குறைந்தபட்ச முன் தயாரிப்புடன் செல்ல ஏதுவாக ஏற்கெனவே சென்னையில் முன் பயணப் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக தமிழ் நாட்டிலிருந்து செல்லும் இளைஞர்கள் இது குறித்து போதிய முன் அனுபவமோ போதிய தகவல்களோ இல்லாமல்செல்லும் நிலையே உள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்தவிழிப்புணர்வு பெற தேவையான முன்பயண புத்தாக்க பயிற்சி பெற நீண்ட தூரம் பயணித்தும்,கூடுதல் செலவு செய்தும் சென்னைக்கு வர வேண்டிய நிலையே உள்ளது.

அரசின் நல திட்டங்கள் அனைத்தும் அவரவர் வசிக்கும் பகுதியிலேயே வழங்கப்படவேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். இந்த அடிப்படையில் 'முன்பயண புத்தாக்கப்பயிற்சி மையம்' சென்னை மட்டுமின்றி வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்பவர்கள் அதிகம் உள்ள இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களிலும் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

அவ்வறிவிப்பினை நடைமுறைப்படுத்திடும் வகையில் ரூ.54,75,000/- (ரூபாய் ஐம்பத்துநான்கு இலட்சத்து எழுபத்து ஐந்தாயிரம்) செலவில் முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையங்கள்அமைத்து தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.இந்த முன் பயண புத்தாக்கப் பயிற்சி மையத்தில் கீழ்க்கண்ட மூன்று பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

அ) வேலைத்தேடி வெளிநாட்டிற்கு செல்லும் அனைவருக்குமான முன் பயண புத்தாக்க பயிற்சி.

ஆ) கட்டிட தொழிலாளர், ஓட்டுநர், எலக்ட்ரீசியன் மற்றும் வீட்டு வேலை போன்றபணிகளுக்காக செல்பவர்களுக்கு இப்பணிகளுக்கான அடிப்படை தேவையான கல்வித்தகுதிகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான தெளிவுகள் ஏற்படுத்துதல்.

இ) ஆங்கிலம் மற்றும் அரபு மொழி தொடர்பான அடிப்படை பயிற்சி. மேற்காணும் பயிற்சிகளுடன் தேவைக்கேற்ப வீட்டு உபயோக மின் சாதனப்பொருட்களை கையாளுதல் போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.

ஒன்றிய அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் மூலம் வெளிநாட்டு வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேலைவாய்ப்பு விசா இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.இப்பயிற்சிக்காக வழங்கப் பட்டவர்கள் உருவாக்கப்பட்டுள்ள வலைதளத்தில் (nrtamils.tn.gov.in) முகவர்கள் மூலம் பயிற்சியில் கலந்து கொள்வோர்தங்களை பதிவு செய்யலாம். மேலும் புதியதாக வேலைக்கு செல்ல விரும்பும் நபர்களும்நேரடியாக பதிவு செய்து கொண்டு பயிற்சியில் பங்கேற்கலாம்.பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு முன் பயண புத்தாக்க பயிற்சி கையேடுகள்மற்றும் பயிற்சியை நிறைவு செய்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இப்பயிற்சி மையங்கள் மூலம் தமிழ் நாட்டிலுள்ள பன்னாட்டு விமானநிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு காணொளிகள் மூலமாகவும் மற்றும் கிராம சபைக் கூட்டங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் அயல் நாட்டு வேலை தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி தமிழர்கள் பாதுகாப்பான புலம்பெயர்தலை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 Dec 2023 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...