/* */

கோயம்பேடு வியாபாரிகளுக்கு.. 10 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் அனுமதி ரத்து

- சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு.

HIGHLIGHTS

கோயம்பேடு வியாபாரிகளுக்கு..  10 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் அனுமதி ரத்து
X

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

முன்பாக, சென்னை கோயம்பேட்டில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் மார்க்கெட் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்படும்.

கோயம்பேடு மார்க்கெட் பொறுத்தவரை 80 சதவீத வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். எஞ்சியுள்ள 20 சதவீதம் பேர் தடுப்பூசி போடவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், கோயம்பேட்டுக்கு வரும் வெளிமாநில வியாபாரிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போடவில்லை என்றால் வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Updated On: 7 Jun 2021 6:50 AM GMT

Related News