சென்னை மாநகராட்சி சார்பில் ட்ரோன் மூலம், கொசு மருந்து தெளிக்கும் பணி

சென்னை மாநகராட்சி சார்பில் ட்ரோன் மூலம், கொசு மருந்து  தெளிக்கும் பணி
X

சென்னை மாநகராட்சி (பைல் படம்)

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர் வழித்தடங்களில், கொசு புழுக்களை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர் வழித்தடங்களில் கொசு புழுக்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது 3 ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு நாள் ஒன்றிற்கு மூன்று மண்டலங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

நாள்தோறும் எந்தெந்த மண்டலங்களில் ட்ரோன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள கீழ்கண்ட இணையதள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். https://www.gccdrones.in/. இவ்வாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
why is ai important to the future