/* */

சென்னையில் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடரும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

கொரோனா தொற்று குறைந்தாலும் சென்னையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சென்னையில் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடரும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
X

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வல்லுநர் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் தினசரி செய்யப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்காமல் தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்படும். காய்கனி, இறைச்சி விற்பனை மேற்கொள்ளும் மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை செய்ய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் கணக்கெடுப்பு செய்து, அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என்பதையும் கேட்டறிந்து, அதனடிப்படையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 11 Jun 2021 3:53 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  2. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  3. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  6. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  8. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  9. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  10. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...