/* */

சென்னை மதுரவாயல்: கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 3 பேர் கைது!

சென்னை மதுரவாயலில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை மதுரவாயல்: கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 3 பேர் கைது!
X

கஞ்சா, கோப்பு படம்

சென்னை நெற்குன்றம் செந்தமிழ் நகர் பகுதியில் இன்று காலை இரு சிறுவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விரைந்து சென்ற போலீசார், அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை மடக்கிப் பிடித்து கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஒருவர் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (வயது 19) என தெரியவந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவருக்கு இவர்கள் கஞ்சாவை கொண்டு வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் போலீசார் அவர்கள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவையும் 2 செல்போன்கள் மற்றும் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Jun 2021 8:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது