/* */

சென்னை: யோகா செய்து அசத்திய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை அரும்பாக்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

HIGHLIGHTS

சென்னை: யோகா செய்து அசத்திய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
X

அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா செய்த காட்சி.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சிறந்த அத்லட்டிக் வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்யக்கூடியவர்.

இந்தநிலையில், சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள அரசினர் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான கட்டளை மையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர் மருத்துவமனையை ஆய்வு செய்த அவர், மருத்துவமனையில் உள்ள இயற்கை சிகிச்சை பிரிவு மையத்தில் திடீரென்று யோகா செய்து காட்டினார். பல்வேறு யோகாசனங்களை அவர் செய்ததை கூடியிருந்த பலரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மருத்துவர்கள் அனைவரும் கைத்தட்டி அமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Updated On: 11 Jun 2021 3:12 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்