/* */

அம்பத்தூர் அருகே தொடக்கப் பள்ளி ஆண்டு விழா: மாணவர்கள் கொண்டாட்டம்

அம்பத்தூர் அருகே பாடி பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவை பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாணவர்கள் கொண்டாடினர்.

HIGHLIGHTS

அம்பத்தூர் அருகே தொடக்கப் பள்ளி ஆண்டு விழா:  மாணவர்கள் கொண்டாட்டம்
X

மஞ்சக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்றில் 30ம் வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை அம்பத்தூர் அருகே பாடி மஞ்சக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்றில் 30 ம் வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் சமூக ஆர்வலருமான காஸ்டிங் பாபு கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் உள்ள தொடக்க பள்ளிகளியின் பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கு படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பல லட்சம் மதிப்பீட்டில் தனது சொந்த செலவில் செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஆண்டு விழாவையும் தலைமை ஏற்று நடத்தினார்.

அப்பள்ளியில் பயின்றுவரும் மாணவ மாணவியர்களுக்கு மாதம் ஒருவருக்கு 200 ரூபாய் வீதம், அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை அவரது வங்கி கணக்கிலுருந்து பரிமாற்றம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் கோடைகால ஆரம்பத்திலிருந்து பள்ளி குழந்தைகளுக்கு தினமும் சத்து நிறைந்த பழங்களை வழங்கி வருகிறார்.

இந்நிகழ்வில் அங்கு பயிலும் குழந்தைகளின் துள்ளலான ஆடல் பாடல் மற்றும் நாடக நிகழ்ச்சிகளும் அரங்கேறியது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியற்கு காஸ்டிங் பாபு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசு தொகையையும் வழங்கினார்.

இந்நிகழ்சியின் சிறப்பு அழைப்பாளராக 87 வது வார்டு மாமன்ற உறுப்பினர் A.P. பூர்ணிமா, பங்கஜம் பாபு மற்றும் அதே பள்ளியில் பயின்றுவரும் சிறுவர் சிறுமியர் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 May 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  5. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  7. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  9. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  10. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!