Police Attack Video- அம்பத்தூர் பகுதியில் காவல்துறையினர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ
Police Attack Video- அம்பத்தூர் தொழில்பேட்டை பகுதியில் காவலரை வட மாநில வாலிபர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
HIGHLIGHTS
வட மாநில வாலிபர்கள் காவல்துறையினரை தாக்கும் வீடியோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டரைவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் வட மாநில வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதன் புகார் சம்பந்தமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் நிலை காவலர் ரகுபதி என்பவர் விசாரிக்கச் சென்றார் .
அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் பொழுது, எதிர்பாராத விதமாக காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டது. இதில் காயம் அடைந்த ரகுபதி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இரு தரப்பினரிடையே மோதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் ரோஷன் குமார், பிளாக் தாஸ், பின்டு, ராம்ஜித் ,சுராஜ் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இச்சம்பம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தற்போது வட மாநில வாலிபர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி, மக்களிடையேபெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.