அம்பத்தூர் தனியார் நிறுவனத்தில் தீ: ரூ.1 கோடி பொருட்கள் சாம்பல்

அம்பத்தூர் தனியார் நிறுவனத்தில் தீ: ரூ.1 கோடி பொருட்கள் சாம்பல்
X

கோப்பு படம் 

அம்பத்தூர் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை அருகே தனியாருக்கு சொந்தமான தார்பாய் தயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது. இன்று அதிகாலை, 3 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது.

தகுதி அடிப்படையில் அம்பத்தூர், வில்லிவாக்கம், கோயம்பேடு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 8 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் தார்பாய் கம்பெனி நிர்வாக இயக்குனர் கேசவலு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?