/* */

பல்லாவரம்: செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

பல்லாவரம் அருகே செல்போன் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பல்லாவரம்: செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
X

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரன் நகர் 2வது தெருவில் தங்கி, கட்டிட வேலை செய்து வருபவர், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சபீர்அலி (20). இவர், செல்போனை தலையின் அருகே வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், சபீர் அலியின் செல்போனை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு கண் விழித்த சபீர்அலி, சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த நண்பர்கள் தப்பிச் செல்ல முயன்ற திருடர்களில் ஒருவனை துரத்தி மடக்கிப் பிடித்து, சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், பல்லாவரம் அடுத்த மலைமேடு பகுதியைச் சேர்ந்த பூவரசம்(22) என்பதும், தப்பிச் சென்ற இன்னொருவர், பல்லாவரம், ஈஸ்வரி நகரை சேர்ந்த உசேன் (22) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் பல்லாவரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி அந்த வாகனத்தில் சென்று செல்போன் கொள்ளையில் ஈடுப்பட்டது தெரியவந்தது. பல்லாவரம் இந்திராகாந்தி நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த உசேனை, போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் சபீர்அலியிடம் திருடிய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...