/* */

ஆடிப்பெருக்கு புதுமண தம்பதிகளின் வேண்டுதலுக்காக குட்டித்தேர்கள்

ஆற்றில் பொதுமக்கள் வழிப்பாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்கள் விற்பனை ஆகுமா என்ற சோகத்தில் தச்சர்கள் உள்ளனர்.

HIGHLIGHTS

ஆடிப்பெருக்கு புதுமண தம்பதிகளின் வேண்டுதலுக்காக குட்டித்தேர்கள்
X

அரியலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தச்சர்களால் தயார் செய்யப்பட்ட தேர்கள்.




அரியலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தச்சர்களால் தயார் செய்யப்பட்ட தேர்கள், பொதுமக்கள் ஆற்றில் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டதால், உற்பத்தி செய்யப்பட்ட தேர்கள் விற்பனையாகத கவலையில் தச்சர்கள் ஆழ்ந்துள்ளனர்.


அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் அதிக அளவில் தச்சர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பாரம்பரியமாக தச்சுத்தொழிலை மேற்கொள்ளும் தச்சர்கள். ஆடிப்பெருக்கிற்காக சிறிய தேர்களை வடிவமைப்பார்கள். புதுமணத்தம்பதிகள் தங்களது தாலிக்கொடியை மாற்றிக்கொள்ள ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்லும்போது வழிப்பாட்டிற்காக கருகமணி, ஓலை, பேரிக்காய் உள்ளிட்ட பொருள்களுடன் தேரையும் வாங்கிச்சென்று படையல் இடுவார்கள். இவ்வாறு செய்தவன் மூலம் அடுத்தவருடத்திற்குள் தங்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்பட்டு தங்களது குழந்தைகள் இந்த தேரை ஓட்டி நடைப்பயில்வார்கள் என்பது ஜதீகம்.


இவ்வருடம் கொரோனா தொற்று பரவுதல் காரமணாக நீர்நிலைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. தச்சர்கள் அதிக அளவு தேர் செய்திருக்கும் நிலையில் தற்போது அரசு விதித்துள்ள தடையால், நாளை ஒருநாளில் இந்த தேர்கள் விற்பனையாகுமா என்ற வேதனையில் தச்சர்கள் ஆழ்ந்துள்ளனர். கையில் உள்ள காசை வைத்து மரங்களை வாங்கி இழைத்து தேர்களை உருவாக்கியுள்ள நிலையில், தேர்கள் விற்பனையாகாமல் தேங்கிவிட்டால் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த இருமாதங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு ஆறுகளில் தண்ணீர் ஒடுவதால் ஆடிப்பெருக்கன்று பொதுமக்கள் வழிபாடு நடத்த தடையிருக்காது என்று எண்ணி, தேர்களை செய்துள்ளனர். தற்போது பொதுமக்கள் ஆற்றில் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டதால், என்ன செய்வது என்று அறியாமல் தச்சர்கள் திகைத்து போயுள்ளனர்.

Updated On: 3 Aug 2021 4:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...