/* */

தபால் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகை திருட்டு

ஜெயங்கொண்டத்தில் தபால் நிலையத்திற்கு சென்ற பெண்ணிடம் மணிபர்சில் வைத்திருந்த 2 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுபற்றி ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தபால் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகை திருட்டு
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்.(40) பெயிண்டராக உள்ளார். இவரது மனைவி கலாராணி(45) இவர் நேற்று ஜெயங்கொண்டத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணம் எடுத்துவிட்டு,

பின்னர் தனியார் நகைக்கடை ஒன்றில் அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்பதற்காக சென்றார். அங்கு அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்டு தனது மணிபர்சில் பத்திரமாக வைத்துக்கொண்டு, நேராக ஜெயங்கொண்டம் தபால் நிலையத்திற்கு அவர் சென்றுள்ளார்.

அங்கு மணிபர்சை மேஜை மீது வைத்துவிட்டு, அதன் அருகிலேயே பணம் கட்டுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தார். பின்னர் படிவத்தைக் கொடுத்து விட்டு மேஜையை பார்த்த போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது மணிபர்சை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர்.

அவரது மணிபர்ஸில் 2 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த கலாராணி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஜெயங்கொண்டத்தில் பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 April 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  2. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  4. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  7. ஆன்மீகம்
    கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா
  8. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  9. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  10. கோவை மாநகர்
    வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கோவை வ.உ.சி பூங்கா புள்ளி மான்கள்