/* */

கட்டிட தொழிலாளர்கள் இடையே மோதல்: இளைஞரை கொன்று புதைத்த சக தொழிலாளி

கோவை அருகே கட்டிட தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் சக தொழிலாளி இளைஞரை கொன்று புதைத்து உள்ளார்.

HIGHLIGHTS

கட்டிட தொழிலாளர்கள் இடையே மோதல்: இளைஞரை கொன்று புதைத்த சக தொழிலாளி
X

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.

கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவிற்குட்பட்ட அல்லப்பாளையம் கிராமத்தில் ஸ்ரீதிருமுருகன் நகரில் தனியாருக்கு சொந்தமான மனையிடம் உள்ளது. இதில் கோவையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சைட் நம்பர் 10ல் மனையிடம் உள்ளது. அந்த இடத்தில் தற்போது பாலகிருஷ்ணன் வீடு கட்டி வருகிறார். இதனிடையே நேற்று மாலை இடத்திற்கு பாலகிருஷ்ணன் வந்துள்ளார்.

அப்போது வீட்டின் ஓரத்தில் ஆண் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதன்பின் பாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின் பேரில் அன்னூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டைக் கட்டி வரும் என்ஜினீயர் பிரகதீஷிடம் இது தொடர்பாக விசாரித்த போது கோவையை சேர்ந்த அசோக்குமார், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், முருகையன் ஆகியோர் வேலை செய்தது தெரிந்தது. விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வீடு கட்டும் இடத்தில் இவர்கள் மூவரும் குடிபோதையில் சண்டையிட்ட போது, சதீஷ், முருகன் ஆகியோர் சேர்ந்து அசோக் குமாரை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அசோக் குமார் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சதீஷ், முருகையன் ஆகிய இருவரும் சேர்ந்து அசோக்குமாரின் உடலை அதே இடத்தில் குழி தோண்டி அவசர அவசரமாக புதைத்துள்ளனர்.

இதனிடையே சதீஷ் என்பவரது உடல் நீலகிரி மாவட்டம் லவ்டேல் பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் முருகையினை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிட தொழிலாளியை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 Jan 2024 10:25 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!